web log free
December 22, 2025

தர்மிக்க பெரேரா குறித்து வெளியான தகவல் 

2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை முன்மொழிவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் இதனை ஒரு தொலைக்காட்சி சேனலில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது, 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் வேட்பாளராக தம்மிக்க பெரேராவின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் அதனை மறுத்ததாகும்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த சாகர காரியவசம் கூறியதாவது:

“2024 ஜனாதிபதி தேர்தலுக்கான எமது கட்சியின் வேட்பாளராக தம்மிக்க பெரேராவையே முன்வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். அவர் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்; தேர்தலில் போட்டியிடவும் தயாராக இருந்தார்.

அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் அவரது ஜாதக நேரங்களுக்கு ஏற்பவும், அவரது தேவைகளுக்கேற்பவும் திட்டமிடப்பட்டிருந்தன. கட்சியும், மற்ற அரசியல் கட்சிகளும் இணைந்து மேற்கொண்ட அனைத்து உடன்பாடுகளும் அவரது தேவைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன.

நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக முன்வைக்கும் எந்த அவசியமும் எமக்கில்லை.

அவரது பெயரை அதிகாரப்பூர்வமாக முன்மொழிய ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன், அதாவது 5ஆம் திகதி, தம்மிக்க பெரேரா ‘வேண்டாம்’ என எமக்கு அறிவித்தார்.”

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd